நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்: நிர்வாகிகளுடன் ஆலோசனையில் இறங்கும் கமல்ஹாசன்...!

நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்: நிர்வாகிகளுடன் ஆலோசனையில் இறங்கும் கமல்ஹாசன்...!

2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், தேர்தல் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்வதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார். இதுகுறித்து, மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில், 2024 நாடாளுமன்றத் தேர்தல் கலந்தாலோசனைக் கூட்டம் வருகிற 28ம் தேதி மதியம் 2 மணியளவில் கோவையில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : பிரதமர் நிதிக்கு ஏன் தணிக்கை இல்லை? - காங்கிரஸ் கேள்வி!

மேலும், நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், கோவை மற்றும் சேலம் மண்டலங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் இக்கூட்டத்தில் தவறாது கலந்துகொள்ள வேண்டும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.