நியாயம் கேட்டு வந்த காஞ்சி டிக்டாக் பிரியா... கடுமையாக தாக்கிய ஆய்வாளர்...வைரலாகும் வீடியோ!

நியாயம் கேட்டு வந்த காஞ்சி டிக்டாக் பிரியா... கடுமையாக தாக்கிய ஆய்வாளர்...வைரலாகும் வீடியோ!

காஞ்சிபுரத்தில் பெண் ஒருவரை, சிறப்பு உதவி ஆய்வாளர் கடுமையாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

டிக்டாக்கில் வலம் வந்த பிரியா:

காஞ்சிபுரம் தாயம்மன்குளத்தை சேர்ந்தவர் டிக்டாக் பிரியா. இவர் டிக்டாக்கில்  நடித்தும், பேசியும் பல்வேறு பதிவுகளை அடிக்கடி பதிவிட்டு வந்ததால் அவருக்கு டிக்டாக் பிரியா என்று பெயர் உண்டானது. அத்துடன் பிரியா பாலியல் தொழில் செய்துவந்ததாகவும் கூறப்படுகிறது.

காவலருடன் தொடர்பு:

தொடர்ந்து, காஞ்சிபுரம் காவல்நிலையத்தில் தனிப்பிரிவில் காவலராக பணியாற்றிய சோமசுந்தரம் என்பவருடன் பிரியாவுக்கு தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சோமசுந்தரத்திற்கும் பிரியாவுக்கும் இடையில் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க: https://www.malaimurasu. com/posts/tamilnadu/Factories-discharging-tanner-effluents-into-milk

அதிரடி மாற்றம்:

இதனால் சோமசுந்தரம், பிரியாவிற்கு காவல்துறையினர் மூலம் அடிக்கடி தொந்தரவு செய்துவந்ததாகவும், பிரியாவின் தம்பியை வழக்கு ஒன்றில் பிடித்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து சோமசுந்தரத்தின் மீது எழுந்த பல்வேறு புகார்களை அடுத்து காவல்துறை உயர் அதிகாரிகள் கவனத்திற்கு வந்ததால் அவரை உத்திரமேரூர் அடுத்த பெருநகர் காவல்நிலையத்திற்கு மாற்றம் செய்துள்ளனர்.

பிரியாவை தாக்கிய காவலர்:

இந்தநிலையில் சோமசுந்தரத்தின் தொந்தரவு தாங்கமுடியாத பிரியா, அவரை தேடி பெருநகர் காவல்நிலையத்திற்கு வந்து சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சோமசுந்தரத்திடம் நியாயம் கேட்டுள்ளார்.  இதனால் ஆத்திரம் அடைந்த சோமசுந்தரம் காவல்நிலைய வாசலிலேயே வைத்து சககாவலர்கள் முன்னிலையில் பிரியாவை தாக்கியுள்ளார். இதனால்  காவல்நிலையமே பரப்பரப்பாக மாறியது. தொடர்ந்து, இந்த சம்பவங்கள் அனைத்தையும் அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.

வீடியோ வைரல்:

டிக்டாக் பிரியாவை காவலர் தாக்கிய சம்பவம், கடந்த சிலத்தினங்களுக்கு முன்பு நடந்தது. ஆனால், இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.