மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல்... கராத்தே மாஸ்டர் மீது மேலும் ஒரு வழக்கு...

பாலியல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தற்காப்புக்கலை பயிற்சியாளர் கெபிராஜ்  மீது அளிக்கப்பட்ட மற்றொரு புகாரில் போக்சோ உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அந்த வழக்கிலும் கெபிராஜை போலீசார் கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல்... கராத்தே மாஸ்டர் மீது மேலும் ஒரு வழக்கு...
சென்னை அண்ணா நகர் பகுதியில் தற்காப்புக்கலை பயிற்சி நடத்தி வந்தவரும், தனியார் பள்ளி பகுதிநேர பயிற்சியாளருமான கெ பிராஜ் மீது கேரள மாணவி ஒருவர் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் தற்காப்புக்கலை பயிற்சியாளர் கெ பிராஜ் மீது அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் துறையினரால் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் கடந்த மாதம் 30 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
பின்னர் வழக்கு விசாரணை சி. பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து சி. பி.சி.ஐ.டி போலீசார் கெ பிராஜை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின்போது கெ பிராஜை அவரது பயிற்சி மையம், வீடு ஆகிய இடங்களுக்கு நேரில் அழைத்துச் சென்று அவர் பயன்படுத்திய கணினி-யின் சி. பி.யூ, செல்போன், லேப்டாப் உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
 
இதனையடுத்து கெ பிராஜால் பாதிக்கப்பட்ட மாணவிகள் யாராயினும் அவர் மீது புகார் அளிக்கலாம் எனக்கூறி சி. பி.சி.ஐ.டி போலீசார் தரப் பில் தொலைபேசி எண்ணும், மின்னஞ்சல் முகவரியும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் வெளிநாட்டு வாழ் பெண் ஒருவர் பயிற்சியாளர் கெ பிராஜ் மீது இணைய வழியில் தானும் தற்காப்புக்கலை பயிற்சியாளர் கெ பிராஜால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தனக்கும் பயிற்சியின்போது கெ பிராஜ் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் புகார் அளித்த நிலையில் அந்த வழக்கில் கெ பிராஜ் மீது போக்சோ உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் அந்த வழக்கிலும் கெ பிராஜை கைது செய்த அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீசார் அவரை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.