"தமிழ்நாட்டில் பாஜகவிற்கு மெஜாரிட்டி கிடைக்காது" நடிகை கஸ்தூரி பேட்டி!

"தமிழ்நாட்டில் பாஜகவிற்கு மெஜாரிட்டி கிடைக்காது" நடிகை கஸ்தூரி பேட்டி!

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜகவிற்கு மிகப்பெரிய மெஜாரிட்டி எல்லாம் கிடைக்கப் போவதில்லை என்று திரைப்பட நடிகை கஸ்தூரி நேற்று திருப்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.


  
முதலில் இந்து மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்க நடிகை கஸ்தூரி திருப்பூருக்கு நேற்று வந்திருந்தார். அப்போது சுதந்திர போராட்ட தியாகி திருப்பூர் குமரன் சிலைக்கு மரியாதை செலுத்தி விட்டு செய்தியாளர்களிடம் பேசுகையில், அமித்ஷா தேர்தலை குறிவைத்து தமிழ்நாட்டுக்கு வந்திருப்பதாக தெரியவில்லை. ஒத்த கருத்துடைய அமைப்புகளை ஒருங்கிணைக்க அவர் வந்திருக்கிறார் என தெரிவித்தார்.

மேலும், 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜகவிற்கு மிகப்பெரிய மெஜாரிட்டி எல்லாம் கிடைக்கப் போவதில்லை என்றும், கொஞ்சம் கொஞ்சமாக ஒரு வாக்கு வங்கி உருவாவதை பார்க்க முடிவதாகவும் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாறுதல் அவ்வளவு சீக்கிரம் வந்து விடாது. பல 10 ஆண்டுகள் திராவிட கழக ஆட்சிகளை கண்ட தமிழ்நாட்டில் அவ்வளவு சீக்கிரம் பெரிய புரட்சி மாற்றம் எல்லாம் இருக்காது எனக் கூறிய அவர், ஆனால் கண்டிப்பாக வளர்ச்சி இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:அடுத்தக்கட்ட ஆளுமைகள்!