குலசேகரப்பட்டினம் மகிஷா சூரசம்கார நிகழ்ச்சி... லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் மகிசாசூரசம்கார நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சாமி தாிசனம் செய்தனா். 

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தசரா திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்தாண்டு தசரா திருவிழா கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் இரவு அம்மன் வெவ்வேறு வாகனங்களில் பல்வேறு கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிசாசூரசம்கார நிகழ்ச்சி நள்ளிரவில் கோயில் கடற்கரையில் வெகுவிமா்சையாக நடைபெற்றது. அதனை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் மஹிஷா சூரமர்த்தினி கோலத்தில், சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கடற்கரைக்கு எழுந்தருளி சூரனை வதம் செய்தாா். அப்போது ஓம் காளி, ஜெய் காளி என்ற பக்தி முழக்கம் விண்ணை பிளந்தது. 

இதில் தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலத்திலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து, காப்பு கட்டி காளி, அம்மன், ராஜா, ராணி, குறவன், குறத்தி, உள்ளிட்ட பல்வேறு வேடங்கள் அணிந்து அம்மனை தாிசனம் செய்தனா். 

திருவிழாவை முன்னிட்டு 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் 30 இடங்களில் 70 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணித்து வந்தனர். பக்தர்கள் வசதிக்காக சுமார் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.