திருமங்கலம் அரசு மருத்துவமனையில் மருத்துவர் பற்றாக்குறை.. அவதிக்கு ஆளாகி வரும் நோயாளிகள்!!

மதுரை திருமங்கலம் அரசு மருத்துவமனையில் மருத்துவர் பற்றாக்குறையால் நோயாளிகள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள்.

திருமங்கலம் அரசு மருத்துவமனையில் மருத்துவர் பற்றாக்குறை.. அவதிக்கு ஆளாகி வரும் நோயாளிகள்!!

மதுரை திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனைத்து துறைகளிலும் சேர்த்து மொத்தம் 17 மருத்துவர்கள் பணியாற்ற வேண்டும். ஆனால் தற்பொழுது நான்கு மருத்துவர்கள் மட்டுமே பணியில் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.  இதனால் காலை முதல் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

மேலும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக இங்கு உள்ள ஸ்கேன் சென்டர் வேலை செய்யவில்லை  என்றும் இங்கு வரும் நோயாளிகளை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்ல  மருத்துவர்கள் பரிந்துரை செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போதிய மருத்துவர்களை நியமித்து  ஏழை எளிய மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.