அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட அரசு ஆவண செய்யுமா? அமைச்சர் பதில்

அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட அரசு ஆவண செய்யுமா? அமைச்சர் பதில்

வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மனை பிரிவு போடப்பட்டுள்ளது என வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். 

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, அணைக்கட்டு தொகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலமாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட அரசு ஆவண செய்யுமா என கேள்வி எழுப்பப்பட்டது.

இதையும் படிக்க : மதம் மாறியவர்களுக்கும் சலுகைகள் கிடைக்க வேண்டும்...ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட முதலமைச்சரின் தனி தீர்மானம்!

இதற்கு பதில் அளித்து பேசிய வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மனை பிரிவு போடப்பட்டுள்ளது என்றும், அதில் பல மனைகள் விற்பனையாகாமல் உள்ளது. எனவே அவசியம் அவசரம் கருதி எந்த பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் வேண்டுமோ அங்கே கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.