கடைசி நாள் கூட்டத்தொடர்...ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் புறகணிப்பு...!

கடைசி நாள் கூட்டத்தொடர்...ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் புறகணிப்பு...!

தமிழக சட்டப்பேர வை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இரு வரும் புறக்கணித்துள்ளனர்.

கடைசி நாள் பேர வைக்கூட்டம் :

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் கடந்த 9 ஆம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேர வை அன்றைய தினம் ஆளுநர் உரையால் சர்ச்சையுடன் நிறை வடைந்தது. இதைத்தொடர்ந்து நடைபெற்று வந்த சட்டப்பேர வையின் கடைசி நாளாக இன்றும் சட்டப்பேர வை கூடியது. 

முதல் நிகழ் வு :

இதில் முதல் நிகழ் வாக, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாத வ் மற்றும் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ உக்கரபாண்டி ஆகியோர் மறை வுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து வினாக்கள்  விடைகள் நேரம் தொடங்கியது.

இதையும் படிக்க : விரை வில் புதுக்கோட்டையில் ரூ.642 கோடியில் புதிய குடிநீர் திட்டம்...அமைச்சர் சொன்ன பதில் என்ன?

எ. வ. வேலு பதில் :

அப்போது, எம்.எல்.ஏ பொன்னுசாமி எழுப்பிய கேள் விக்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ. வேலு, கொல்லிமலையில் நெடுஞ்சாலைத்துறையின் புதிய அலு வலகம் அமைக்க நடப்பாண்டில் நட வடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரி வித்தார்.

தங்கம் தென்னரசு பதில் :

இதைத்தொடர்ந்து சர் வதேச தரத்தில் வர்த்தக மையம் அமைப்பது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள் விக்கு, பதிலளித்த  தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஓசூரில் சர் வதேச தரத்தில் வர்த்தக மையம் அமைக்க நட வடிக்கை எடுக்கப்படும் என வும், வேலை வாய்ப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என வும் தெரி வித்தார்.

இபிஎஸ் - ஓபிஎஸ் புறக்கணிப்பு:

இதையடுத்து சட்டப்பேர வையில் ஆளுநர் உரைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை வழங்க இருந்த நிலையில், அதனைப் புறக்கணித்து விட்டு எதிர்க்கட்சித் தலை வர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் சென்றார். அதேபோல் ஓ.பன்னீர்செல் வமும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்காதது குறிப்பிடத்தக்கது.