ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தை... கால்நடைகளை தொடர்ந்து வேட்டையாடி வருவதால் பொதுமக்கள் அச்சம்!!

சத்தியமங்கலம் அருகே கிராமத்துக்குள் புகுந்த சிறுத்தை 5 ஆடுகளை வேட்டையாடி கொன்றதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தை... கால்நடைகளை தொடர்ந்து வேட்டையாடி வருவதால் பொதுமக்கள் அச்சம்!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம் பகுதியில் சுமார் 100-க்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த சில தினங்களாகவே சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் பரவியது.

இந்த நிலையில், அப்பகுதியை சேர்ந்த விவசாயி முருகன் என்பவர் தனது விவசாய தோட்டத்திற்குள் கட்டி வைத்திருந்த ஐந்து ஆடுகள் கழுத்துப்பகுதியில் கடிபட்ட நிலையில் ரத்தம் உறிஞ்சப்பட்டு இறந்து கிடந்துள்ளன. தகவலறிந்து வந்த வனத்துறையினர், இறந்த ஆடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தபோது, சிறுத்தை வேட்டையாடி இருப்பது தெரியவந்தது. இதனால் அச்சத்தில் உறைந்துள்ள கிராம மக்கள், சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டுமென வனத்துறையினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.