நேரடி வகுப்புகள் இன்று தொடக்கம்...  முதலாமாண்டு மாணவர்கள் மகிழ்ச்சி...

தமிழகம் முழுவதும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் நேரடி வகுப்புகள் தொடங்குகிறது. 

நேரடி வகுப்புகள் இன்று தொடக்கம்...  முதலாமாண்டு மாணவர்கள் மகிழ்ச்சி...

கொரோனா இரண்டாம் அலை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில், கொரோனா பரவல் தற்போது குறைந்து வருகிறது. இந்நிலையில், செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன.

கல்லூரியில் இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டுகளுக்கு மட்டுமே நேரடி வகுப்புகள் தொடங்கிய நிலையில், மாணவர் சேர்க்கை காரணமாக முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்காமல் இருந்தது.

இந்நிலையில், அனைத்து வகை கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் முதலாம் ஆண்டு சேர்க்கை நிறைவு பெற்றதையடுத்து, இன்று முதல் வகுப்புகள் தொடங்குகிறது. நேரடி வகுப்புகள் தொடங்கியதால், கல்லூரி முதலாண்டு மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.