தமிழகத்தில் நிலுவையில் உள்ள நெடுஞ்சாலை திட்டங்கள்.. இந்தாண்டுக்குள் முடிக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

தமிழகத்தில், நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள 9 நெடுஞ்சாலை திட்டங்கள் இந்த ஆண்டுக்குள் முடிக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நிலுவையில் உள்ள நெடுஞ்சாலை திட்டங்கள்.. இந்தாண்டுக்குள் முடிக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில், தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை திட்டப்பணிகள் தாமதம் தொடர்பாக, திமுக மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி அளித்த பதிலில், தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளை அமைப்பதற்காகவும், திட்டங்களை விரைவாக செயல்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். கொரனோ பேரிடரால், சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக நெடுஞ்சாலை பணிகளில் தொய்வு ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.  

சென்னை-தடா இடையிலான 6 வழி சாலை திட்டம், செட்டிகுளம்-நத்தம் இடையிலான நான்கு வழி சாலை, விக்கிரவாண்டி- சேத்தியாதோப்பு நெடுஞ்சாலை திட்டம், வில்லுக்குறி- கன்னியாகுமரி இடையிலான சாலை திட்டம், சோழபுரம்-தஞ்சாவூர் இடையிலான நான்கு வழி சாலை திட்டம், காரைக்குடி-ராமநாதபுரம் இடையிலான 80 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலை திட்டம் உள்ளிட்ட 9 முக்கிய திட்டங்கள் இந்தாண்டுக்குள் முடிக்கப்படும் எனவும்  மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.