"பொய்களை சம்பளம் கொடுத்து ஆள் வைத்து பரப்புகிறது அதிமுக, பாஜக" முதலமைச்சா் விமர்சனம்!!

மக்களை ஏமாற்றுவதற்காக அவதூறு பரப்பும் கூட்டங்களை அம்பலப்படுத்த வேண்டும் கட்சி நிா்வாகிகளுக்கு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா். 

திராவிட மாத கொண்டாட்டத்தின் கடைசி நாளில் 'எல்லோருக்கும் எல்லாம்' என்ற தலைப்பில் முதலமைச்சா் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் காணொலி காட்சி வழியாக உரையாற்றினார். அப்போது அவா் பேசுகையில், அதிமுகவும், பாஜகவும் பொய் செய்திகளையும் பரப்புவதற்காக பலரை சம்பளம் கொடுத்து வைத்துள்ளனா். அதிமுகவிற்கு கொள்கை என்று ஒன்றும் கிடையாது என விமா்சித்தாா்.

மேலும் எதிர்காலத்தில் தமிழ்நாடு எதிர்நோக்கி இருக்கக்கூடிய பிரச்னைகளை எதிர்த்து போராட வேண்டும் என தொிவித்த முதலமைச்சா் மக்களை ஏமாற்றுவதற்காக அவதூறு பரப்பும் கூட்டங்களை நாம் அம்பலப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினாா்.

தொடா்ந்து பேசிய மு.க.ஸ்டாலின் அதிமுகவும், பாஜகவும் பரப்பும் பொய்களுக்கு ஆயுள் நிறைய குறைவு எனவும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் INDIA கூட்டணி வெற்றி பெறுவதற்காக பாடுபட வேண்டும் என்றாா். 

பிரதமா் மோடி மணிப்பூருக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை நோில் சந்தித்தாரா? என்ற கேள்வியை அனைவரிடமும் எழுப்புவோம் என தொிவித்தாா்.