யாதும் ஊரே யாவரும் கேளிர்- பாஜகவினரைக் கேளி செய்த எம் பி சு வெங்கடேசன்:

யாதும் ஊரே யாவரும் கேளிர்- பாஜகவினரைக் கேளி செய்த எம் பி சு வெங்கடேசன்:

44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, தற்போது தொடங்கியுள்ள நிலையுள்ள நிலையில், அதற்கான துவக்க விழா சென்னை ஜவகர்லால் நேரு விளையாட்டு அரங்கில் நடந்தது. மிகப் பிரம்மாண்டமாக, பல வகையான கலை நிகழ்ச்சிகளுடன் நடைப்பெற்ற இந்த விழாவில், மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்பட்டது, தமிழர்களின் ஆவணப்படம் தான்.

உலக நாயகன் கமலஹாசன் குரலில், தமிழர்களின் சிறப்பைக் கூறும் இந்த சிறப்பான ஆவணபடமானது, முதன் முதலில் வந்த தமிழ்ர்களின் கலாச்சராம் தொடங்கி, சேர சோழ, பாண்டிய, பல்லவர்கள் பற்றி பேசியது.

பின், லெமூரிய கண்டத்தில் இருந்து, தமிழகம் மேற்கொண்ட அனைத்து வகையான மேம்பாடுகள் வரை இந்த ஆவணப்படம் மிக அழகாக வெளிப்படுத்தியது. சென்னையில் வந்த சுனாமியில் இருந்து, சமீபத்திய வெள்ளம் வரை அனைத்து கடினங்களையும் எதிர்த்து வளர்ந்து வரும் தமிழகம், பெரிதாக முடங்கியது கொரோனா காலத்தில் தான். அதிலும் எப்படி அவர்கள் வெளிவந்தனர் என்பதனை இந்த ஆவணப்படம் மிக அழகாகக் காட்டியது.

தமிழர்களின் கட்டிடக்கலையை விளக்குகின்ற வகையில் தஞ்சை பெரிய கோவில், மாமல்லபுரம் கடற்கரை கோவில் காணொலியும், திருவள்ளுவர், பாரதியார் என தமிழகத்தின் வரலாறுகளையும், பெருமைகளையும் பறைசாற்றுகின்ற வகையில் காணொலி தொடக்க விழாவில்  அலங்கரித்தன.

சமீபத்தில், சென்னை முழுவதும் ஒட்டப்பட்ட ஒலிம்பியாடின் போஸ்டர்களில், தமிழ்நாட்டு முதலமைச்சர் முக ஸ்டாலின் முகம் மட்டும் இருப்பதாகவும், பிரதமர் மோடியின் முகம் இல்லாதது தவறு என்றும், பாஜக கட்சியைச் சேர்ந்த ஒரு சிலர், பிரதமர் மோடியின் படத்தைப் போஸ்டர்களின் மேலேயே ஒட்டத் துவங்கினர். ஆனால், தந்தைப் பெரியார் திராவிடர் கட்சி அழித்தது. இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து, ஒலிம்பியாடின் துவக்க விழாவில் ஒளிபரப்பான ஆவணப்படம், பலரது கவனத்தையும் ஈர்த்தது. இதனை மேற்கோள் காட்டி, சட்டமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன், தனது ட்விட்டர் பக்கம் வரை இதனை இழுத்து, தனது கேளிக்கையான் அகருத்தைப் பதிவிட்டிருக்கிறார். முதலமைச்சர் முக ஸ்டாலினை டாக் செய்து, “விளம்பரங்களில் பிரதமர் படம் கேட்டவர்களுக்கு தமிழர் பெருமை போற்றும் சிறப்பான படம் போட்டு காண்பித்துள்ளார் தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின்” என்று பதிவிட்டிருக்கிறார்.

இது பலராலும் பகிரப்பட்டு வருவதால், வைரலாகி வருகிறது.