மதுரை: பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க.. போலீஸ் அணிவகுப்பு!!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க போலீஸ் அணிவகுப்பு நடைபெற்றது.

மதுரை: பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க.. போலீஸ் அணிவகுப்பு!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19 ம் தேதி நடைபெறுகிறது. மதுரை மாவட்டம் மேலூரில் 27 மற்றும் அ.வள்ளாலபட்டி பேரூராட்சியில் 15 என வார்டு உறுப்பினர் களை தேர்ந்தெடுக்க உள்ளனர். இதில் மேலூரில் 95 அ.வள்ளாலபட்டி பேரூராட்சியில் 51 என திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட், நாம்தமிழர் கட்சிகளை சேர்ந்த  மொத்தம் 146  வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் உத்தரவுப்படி உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் பிரபாகரன் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

ஆய்வாளர்கள் சார்லஸ், பொன்னருள், தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் பிச்சை, சார்பு ஆய்வாளர்கள் சுதன், ஜெயம்பாண்டியன் உட்பட நூத்துக்கும் மேற்பட்ட போலீசார் அணிவகுப்பில் கலந்து கொண்டனர்,  மேலூர் மற்றும் அ.வள்ளாலபட்டி பகுதியில் முக்கிய வீதிகளின் வழியாக ட்ரம்செட் முழக்கத்தோடும் மற்றும் காவல் வாகன சைரன் ஒலியோடும் அணிவகுப்பு நடைபெற்றது.