விபத்து ஏற்படுத்திவிட்டு வேறொருவரை சரணடைய வைத்த மாஜிஸ்திரேட்டு மகன் அதிரடி கைது...

சென்னையில் இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி, 3 வயது குழந்தை உயிரிழந்த விவகாரத்தில், மாஜிஸ்திரேட்டு மகனை போலீசார் கைது செய்தனர்.

விபத்து ஏற்படுத்திவிட்டு வேறொருவரை சரணடைய வைத்த மாஜிஸ்திரேட்டு மகன் அதிரடி கைது...

சென்னை ராயப்பேட்டை சைவமுத்தையா தெருவைச் சேர்ந்த ஜெயராமன், தனது மனைவி சித்ரா, மகன் பார்கவ் மற்றும் மகள் சாய் தன்ஷிகா ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது வேகமாக வந்த கார் மோதியதில், 3 வயதேயான சாய் தன்ஷிகா பரிதாபமாக உயிரிழந்தார்.

காரை ஓட்டி வந்த நபர், வேறொருவரை போலீசில் சரணடைய வைத்ததாக கூறப்பட்ட நிலையில், காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சைதாப்பேட்டையை சேர்ந்த நீதிபதியின் மகனான அஜய் சுப்பிரமணியனை போலீசார் கைது செய்துள்ளனர்.