முதலீட்டு நிறுவனம் நடத்தி ரூ.4.73 கோடி மோசடி செய்த நபருக்கு 10 ஆண்டுகள் சிறை ....

ஈரோடு மாவட்டத்தில் முதலீட்டு நிறுவனம் நடத்தி 4.73 கோடி ரூபாய் மோசடி செய்த நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முதலீட்டு நிறுவனம் நடத்தி ரூ.4.73 கோடி மோசடி செய்த நபருக்கு 10 ஆண்டுகள் சிறை ....

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த செல்லமுத்து என்பவர், அன்னை இன்போடெக் என்ற தனது நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 24 சதவீதம் வட்டி தருவதாக விளம்பரம் செய்துள்ளார்.

இதனை நம்பி ஏராளமானோர் முதலீடு செய்த நிலையில், 118 முதலீட்டாளர்களிடம் 4.73 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கடந்த 2010 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு கோவை முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், செல்லமுத்துவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 4.75 கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.