” மணிப்பூர் பெண்களுக்கு நீதி வேண்டும் ” : மத்திய அரசைக் கண்டித்து தமிழ்நாடு மாணவர்கள் ரயில் மறியல் போராட்டம்.

” மணிப்பூர் பெண்களுக்கு நீதி வேண்டும் ” : மத்திய அரசைக் கண்டித்து  தமிழ்நாடு மாணவர்கள் ரயில் மறியல் போராட்டம்.

மணிப்பூர் மாநிலத்தில் 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற கொடூரத்தை கண்டித்து சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் ரயிலை மறித்து ஆர்ப்பாட்டம்.

 மணிப்பூரில் 2 மாதங்களுக்கும் மேலாக கலவரம் வெடித்து வருகிறது. அதில் குக்கி பழங்குடியினத்தை சேர்ந்த 2 பெண்களை நிர்வாணப்படுத்தி வீதியில் ஊர்வலமாக அழைத்து சென்ற சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு தேசிய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த கொடூர செயலுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சி நிற அமைப்புகள் சாலை மறியல் ஆர்ப்பாட்டங்களை நடத்தி தனது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

 இந்தநிலையில் தற்போது சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் 500க்கும் மேற்ப்பட்டோர் மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் ரயிலை மறித்து தண்டவாதத்தில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  சென்னை கடற்கரையிலிருந்து அரக்கோணம் செல்லும் மின்சார ரயிலை மறித்து மாணவர்கள் தண்டவாளத்தில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 மணிப்பூர் கலவரத்த்தில் பெண்களுக்கு ஏற்பட்ட நிகழ்வுகளை கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டித்தும் உடனடியாக கலவரத்தை நிறுத்த பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 20 நிமிடத்திற்கு மேலாக மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட்டு இருக்கிறது.

மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இன்னும் காவல்துறை அதிகாரிகளோ ரயில்வே அதிகாரிகளும் சுமார் 20 நிமிடத்திற்கு யாரும் வரவில்லை.  இதனால் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை செல்லும் மின்சார ரயில்கள் அனைத்தும் தண்டவாளத்தில் ஆங்காங்கே சுமார் 20 நிமிடம் நிறுத்தப்பட்டன இதனால் ரயில் பாதிப்படைந்தன.

பின்னர் இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீசார் மற்றும் மீனம்பாக்கம் காவல் துறையினர் விரைந்து சென்று தண்டவளத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை குண்டு கட்டாக அப்புறப்படுத்தினர்.

இதையடுத்து சுமார் 20 நிமிடத்திற்கு பிறகு மின்சார ரயில் வழக்கம் போல் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் மார்க்கத்தில் இயக்கப்பட்டது இதனால் மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது.

 இச்சம்பவம் குறித்து கல்லூரி மாணவர்களிடம் ரயில்வே போலீசார் மற்றும் மீனம்பாக்கம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க    | பெண்கள் பாதுகாப்பு என்று கிளிசரின் கண்ணீர் வடித்தவர் எங்கே?” - அமைச்சர் கீதாஜீவன் கேள்வி.