அடையாளம் தெரியாத வாகனம் மோதி மருத்துவ உதவியாளர் பலி!!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அரசு மருத்துவமனை ஊழியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மருத்துவ உதவியாளர் பலி!!

சேலம் மாவட்டம் வைகுந்தம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவர் ஈரோடு அருகேயுள்ள குருவரெட்டியூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில், வழக்கம்போல் பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றுள்ளார். குமாரபாளையம் அருகே சென்ற போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு  அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.