கொரானா விதிமீறல்- நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார் அமைச்சர்...

கடந்த அதிமுக ஆட்சியின்போது கொரானா விதி மீறலில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் திமுக அமைச்சர் முத்துசாமி இன்று ஈரோடு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

கொரானா விதிமீறல்- நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார் அமைச்சர்...

கடந்த அதிமுக ஆட்சியின்போது கொரானா விதி மீறலில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் திமுக அமைச்சர் முத்துசாமி இன்று ஈரோடு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

கடந்த தேர்தலின் போது திமுக மாநில மகளிர் அணி  செயலாளரும், எம்பியுமான, கனிமொழி ஈரோடு மாவட்டத்தில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது கொரோனா  விதிகளை மீறியதாக அப்போதைய அதிமுக அரசு, ஈரோடு மாவட்ட திமுக செயலாளரும், தற்போதைய வீட்டுவசதி துறை அமைச்சருமான முத்துசாமி மீது வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கு இன்று ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் திமுக அமைச்சர் முத்துசாமி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, அமைச்சர் முத்துசாமி அக்டோபர் 12ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.

இதனிடையே, நீதிமன்றத்தில் அமைச்சர் ஆஜரானதை தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் திரண்டதால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.