தீபாவளி: 2 நாட்களில் 3.66 லட்சம் பேர் பயணம்...!

தீபாவளியை முன்னிட்டு அரசு பேருந்துகளில் இதுவரை 3 லட்சத்து 66 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட சென்னையில் இருந்து ஏராளமானோர் தென்மாவட்டங்களுக்கு சென்று கொண்டுள்ளனர். ஆம்னி பேருந்துகளில் கட்டணம் அதிகமாக உள்ளதால் அரசு பேருந்துகளில் பயணிப்பதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதையும் படிக்க : தீபாவளி எதிரொலி: சிறப்பு பேருந்து நிலையங்களில் அலைமோதிய பயணிகள்...!

சென்னை கோயம்பேட்டில் இயக்கப்படும் 4 ஆயிரத்து 176 சிறப்பு பேருந்துகளில் இதுவரை 3 லட்சத்து 66 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் முன்பதிவு செய்யாமல் மக்கள் கூடுதலாக பயணம் செய்ய வந்தாலும் கூடுதல் பேருந்துகளை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.