தமிழகத்தில் 20க்கு மேற்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு

தமிழகம் முழுவதும் 20-க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 20க்கு மேற்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு

நெல்லை மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரன், நகராட்சி நிர்வாக இணை ஆணையராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதேபோல் ஐஏஎஸ் அதிகாரி ரஞ்சித் சிங் , கால்நடை, பராமரிப்பு, பால்வளம், மீனவர் நலத்துறை துணைச் செயலாளராகவும், மதுரை மாநகராட்சி ஆணையராக இருந்த கார்த்திகேயன் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலராகவும் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வீட்டு வசதி மற்றும் நகர்புற மேம்பாட்டு துறை கூடுதல் செயலராக விஜயலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் கூட்டுறவு சங்கத்தின் கூடுதல் பதிவாளராக சங்கரும்,சமூக நலன் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத்துறை கூடுதல் இயக்குனராக கார்த்திகா ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

இதேபோல் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகளின் பணிஇடங்களையும் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.