அரசு பள்ளி மாணவர்களுக்கு திடீர் வாந்தி, மயக்கம்.. ராமநாதபுரதில் பெரும் பரபரப்பு!!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே மதிய உணவு சாப்பிட்ட பள்ளி மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு திடீர் வாந்தி, மயக்கம்.. ராமநாதபுரதில் பெரும் பரபரப்பு!!

ராமநாதபுரம், திருவாடானை  மங்களக்குடி அருகே உள்ள கவலைவென்றான் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று  செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 95 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், மதிய உணவு இடைவேளைக்கு பின்னர் வகுப்பறைக்கு சென்ற மாணவர்கள் வாந்தி மற்றும் வயிற்று வலி இருப்பதாக ஆசிரியரிடம் தெரிவித்து உள்ளனர்.  இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் உடனடியாக மாணவர்களை மீட்டு மங்கலக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மாணவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்தவர்கள் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திருவாடனை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு  ஏற்பட்டுள்ளது.