குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை... மூன்று பேரும் உயிரிழந்த பரிதாபம்... கணவர், நாத்தனார் கைது...

மணப்பாறை அருகே குடும்பத் தகராறில் 3 பேர் உயிரிழந்த சம்பவத்தில் பெண்ணின் கணவர், நாத்தனார் கைது.

குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை... மூன்று பேரும் உயிரிழந்த பரிதாபம்... கணவர், நாத்தனார் கைது...

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வரதன்கோன்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன். இவருக்கும் பொன்னம்பலத்தான்பட்டியைச் சேர்ந்த நித்யா (27) என்ற பெண்ணுக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று நல்லக்கண்ணு என்ற 6 வயது மகளும், ரோகித் என்ற 4 வயது மகளும் உள்ளனர்.

கணவன் – மனைவிக்கு இடையே அவ்வபோது பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ள நிலையில் நித்யா தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தான் கடந்த 30 ம் தேதி கணவன்  வீட்டிற்கு நித்யா சென்ற நிலையில் மீண்டும் பிரச்சனை ஏற்படவே மிகுந்த மனவேதனை அடைந்து அங்கிருந்து தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அதன் பின்னர் மனவேதனையிலேயே இருந்த நித்யா 1ம் தேதி காலை தனது மகள் மற்றும் மகனுக்கு எலி பேஸ்ட் (விஷம்) கொடுத்து விட்டு தானும் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இந்நிலையில் தன்னுடைய இறப்பிற்கு கணவன் மற்றும் நாத்தனார் தான் காரணம் என இறந்து போன நித்யா கடிதம் எழுதி வைத்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மணப்பாறை போலீசார் சந்தேகத்திற்குரிய மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது நித்யாவை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கை மாற்றி கணவர் முருகேசன் மற்றும் நாத்தனார் செல்லமணி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.