"பெட்ரோல் ரேட் இன்றும் உயர்வு".. அப்போ டீசல்? வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி.. விலையை குறைக்க கோரிக்கை!!

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 104 ரூபாயை தாண்டியதால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

"பெட்ரோல் ரேட் இன்றும் உயர்வு".. அப்போ டீசல்?  வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி.. விலையை குறைக்க கோரிக்கை!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலை கடந்த சில நாட்களாகவே உச்சத்தை எட்டி வந்தன. தற்போது அவற்றின் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் இன்றைய தினம், பெட்ரோல் விலை லிட்டருக்கு 47 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 53 காசுகளும் உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் 47 காசுகள் அதிகரித்து 104 ரூபாய் 90-காசுக்கும், டீசல் விலை லிட்டருக்கு 53 காசுகள் உயர்ந்து 95 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆறு தினங்களில் மட்டும்  பெட்ரோல் விலை 3 ரூபாய் 50 காசுகளும், டீசல் 3 ரூபாய் 57 காசுகளும் அதிகரித்துள்ளது. இதனால் அதிருப்தி அடைந்துள்ள வாகன ஓட்டிகள் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.