மணப்பாறை அருகே ரூ. 84 லட்சம் கள்ள நோட்டுகளுடன்.... தொழிலதிபர் உட்பட 3 பேர் கைது...!

மணப்பாறை அருகே ரூ. 84 லட்சம் கள்ள நோட்டுகளுடன்.... தொழிலதிபர் உட்பட 3 பேர் கைது...!

திருச்சி மணப்பாறை அருகே, கள்ளநோட்டு மாற்ற வந்த இருவர் மற்றும் வாங்கிய ஒருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ 84 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி  போலீஸ் ஸ்டேஷன் அருகே, தங்கம் என்ற தங்கவேல் மொபைல் போன் கடை வைத்திருக்கிறார். அவரது கடைக்கு காரில் வந்த இருவர், கள்ள நோட்டுகளை மாற்ற வந்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அதன்படி, போலீசார் நடத்திய சோதனையில், 42 கட்டுகளாக, 2,000 ரூபாய் நோட்டுகள் மொத்தம், 84 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள் பிடிப்பட்டன.  கள்ளநோட்டுகளை கொடுக்க வந்த, கோயம்புத்தூர் கே.கே.புதூரை சேர்ந்த 52 வயதான பார்த்தசாரதி மற்றும்  கணுவாயை சேர்ந்த 33 வயதான டிரைவர் சதீஷ் மற்றும், கள்ள நோட்டுகளை வாங்கிய வையம்பட்டி மொபைல் போன் கடை உரிமையாளர் தங்கவேல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 

இதையும் படிக்க    } அம்பாசமுத்திரம் பல் பிடுங்கப்பட்ட விவகாரம் : சிபிசிஐடி பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை

தொடர்ந்து விசாரித்ததில், கோயம்புத்தூரில் இருந்து, கள்ள நோட்டு கொண்டு வந்தவர்களுக்கு, கேரளாவை சேர்ந்த பட தயாரிப்பாளர் வினோஜ் என்பவர் கொடுத்ததாக கூறுகின்றனர்.

இதையும் படிக்க    } பாஜக கோரிக்கை...மனுவை திரும்ப பெற்ற அதிமுக வேட்பாளர்...!