கல்குவாரி விபத்து.. 4 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி - நெல்லை முதன்மை நீதிமன்றம் உத்தரவு

நெல்லை அருகே கல்குவாரியில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 4 பேரின் ஜாமீன் மனுவை நெல்லை மாவட்ட முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கல்குவாரி விபத்து.. 4 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி -  நெல்லை முதன்மை நீதிமன்றம் உத்தரவு

நெல்லை மாவட்டம் அடைமதிப்பான்குளத்தில் உள்ள கல்குவாரியில் ராட்சத பாறை சரிந்து விழுந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக கல்குவாரி இடத்தின் உரிமையாளர் குமார், அவரது தந்தை செல்வராஜ், குவாரி உரிமம் பெற்ற சங்கரநாராயணன், மேலாளர் ஜெபஸ்டின் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று வரை அனைவரையும் நீதிமன்றக் காவலில் வைக்க நெல்லை நடுவர் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து நால்வரும் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதோடு வரும் 17ம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிடப்பட்டது.