தமிழகத்தின் புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி... வெள்ளிக்கிழமை பதவி ஏற்கிறார்...

தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி, வரும் வெள்ளிக்கிழமை பதவியேற்க உள்ளார். 

தமிழகத்தின் புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி... வெள்ளிக்கிழமை பதவி ஏற்கிறார்...

தமிழகத்தின் 14-வது ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித், பஞ்சாப் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். இதனிடையே, நாகலாந்து ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி, தமிழகத்தின் புதிய ஆளுநராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

நாளை மறுதினம் சென்னை வரும் அவர், தமிழகத்தின் 15-வது ஆளுநராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்க உள்ளார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.