பால்பண்ணைக்கு சாத்தியக்கூறு இல்லை...வேண்டுமானால் பால் உற்பத்தி கூட்டுறவு சங்கத்திற்கு வாய்ப்பு - நாசர் பதில்!

பால்பண்ணைக்கு சாத்தியக்கூறு இல்லை...வேண்டுமானால் பால் உற்பத்தி கூட்டுறவு சங்கத்திற்கு வாய்ப்பு - நாசர் பதில்!

நாகை மாவட்டம் வேதாரண்யம் தொகுதியில் விண்ணப்பிக்கும் பட்சத்தில் புதிய பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், வேதாரண்யம் தொகுதியில் பால் பண்ணையும், தலைஞாயிறு பேரூராட்சியில் பால் குளிரூட்டும் நிலையமும் அமைக்க அரசு ஆவண செய்யுமா என சட்டமன்ற உறுப்பினர் ஓ.எஸ்.மணியன் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிக்க : அண்ணாமலை சொன்னால்...நான் அதற்கு பதில் அளிப்பேன் - ஓபிஎஸ்!

இதற்கு பதிலளித்த அமைச்சர் நாசர், வேதாரண்யம் தொகுதியில் பால்பண்ணை அமைக்கும் சாத்தியக்கூறு இல்லை எனவும், விண்ணப்பிக்கும் பட்சத்தில் புதிய பால் உற்பத்தி கூட்டுறவு சங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.