சென்னை ஐஐடியில் புதிதாக ஒரே நாளில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

சென்னை ஐஐடியில் புதிதாக ஒரே நாளில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

சென்னை ஐஐடியில் புதிதாக 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  சென்னை ஐஐடியில் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி முதல் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஐஐடி மற்றும் அதனைச் சுற்றியுள்ளவர்களுக்கு சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதன்படி தற்போது வரை 7 ஆயிரத்து 475 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதில் நேற்று மட்டும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் ஒருவரின் குழந்தை உள்பட 6 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மாணவர்கள் யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை. இதில் 5 பேர் பணியாளர் குடியிருப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஒருவர் மட்டும் தரமணியில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இதனிடையே அனைவரது உடல் நிலையும் தற்போது சீராக உள்ளதாக கூறப்படுகிறது.