எதிர்கட்சிகள் எத்தனை கணக்கு போட்டாலும் அதிமுகவை அழிக்க முடியாது - சசிகலா பரபரப்பு பேட்டி

எதிர்கட்சிகள் எத்தனை கணக்குகள் போட்டாலும்  தாம் இருக்கும் வரை அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என சசிகலா பரபரப்பாக பேட்டி அளித்துள்ளார்.

எதிர்கட்சிகள் எத்தனை கணக்கு போட்டாலும் அதிமுகவை அழிக்க முடியாது - சசிகலா பரபரப்பு பேட்டி

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய சசிகலா, அதிமுக கட்சி ஏராளமான உண்மை தொண்டர்களின் தியாகத்தில் உருவான இயக்கம் என்றும், இதனை எதிர்கட்சிகள் எத்தனை கணக்கு போட்டாலும் தாம் இருக்கும் வரை அழிக்க முடியாது என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், எம்ஜிஆர் இறந்த போது கட்சியில் ஏற்பட்ட சோதனை காலம் தற்போதும் நிலவுவதாகவும், அன்றைக்கு எவ்வாறு கட்சி மீண்டதோ அதேபோல் விரைவில் அதிமுக புதுப்பொழிவுடன் உன்னத நிலையை அடையும் என்றும் கூறினார்.