புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம்...சீமான் மீது வழக்குப்பதிவு!

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம்...சீமான் மீது வழக்குப்பதிவு!

வடமாநில தொழிலாளர் குறித்து அவதூறாக பேசிய வீடியோ வெளியான விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது வடமாநில தொழிலாளர்கள் குறித்து சீமான் அவதூறாக பேசியதாக அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர் வீடியோ பகிர்ந்திருந்தார்.

இதையும் படிக்க : சென்னை மெட்ரோ ரயில் கட்டம் 2-ல்... 2 நிமிட இடைவேளையில் ஒரு ரயில் இயக்கம்...மெட்ரோ நிர்வாகம் முடிவு!

அதில் ஹிந்தி பேசும் வடமாநில தொழிலாளர்கள் மீது வன்முறையைத் தூண்டும் சீமான் போன்றவர்கள் மீது ஏன் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், வடமாநில தொழிலாளர்கள் மீது வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதற்காக ஈரோடு கருங்கல்பாளையம் காவல் துறையினர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.