திருமா பற்றி ஆபாசமாக பதிவிட்ட நாதக நிர்வாகி கைது...!

திருமா பற்றி ஆபாசமாக பதிவிட்ட நாதக நிர்வாகி கைது...!

விசிக தலைவர் தொல். திருமாவளவன் குறித்து முகநூலில் ஆபாசமாக பதிவிட்ட நாம் தமிழர் கட்சி செயலாளர் புழல் போலீசாரால் கைது செய்யப்பட்டார். 

கடந்த 4  ம் தேதியன்று விடுதலை சிறுத்தை கட்சியின்  திருவள்ளூர் மாவட்ட துணை அமைப்பாளர் மாதனான்குப்பம் பகுதியை சேர்ந்த லெனின் அன்பரசு மற்றும் நிர்வாகிகள் கொளத்தூர் காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அதாவது, தலைவர் திருமாவளவனை பற்றி நாம் தமிழர் கட்சியின் மாதவரம் தெற்கு பகுதி செயலாளர்  புழல் லட்சுமி புரத்தை சேர்ந்த பன்னீர் செல்வம்  என்பவர் முகநூலில் ஆபாசமாக தவறாக பதிவுசெய்ததாகவும், இதேபோல அடிக்கடி  அவதூறாக சித்தரித்து மனதை  புன்படுத்தி  இழிவுபடுத்துவதாகவும் இதுகுறித்து  சம்பந்த பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க புகார் மனு அளித்தனர்.

இதுகுறித்து காவல் துணை ஆணையாளர் சக்திவேல் இதுபற்றி நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி நாம் தமிழர் கட்சியின் மாதவரம் தெற்கு பகுதி செயலாளர் பன்னீர் செல்வம் என்பவரை புழல் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம்  காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்து  கைது செய்தார்.

பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில்   அடைத்தார்.இதன்காரணமாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிக்க     | புதியவர்களுக்கு அதிக வாய்ப்பு - புதுப்பிக்கப்பட்ட திமுக இளைஞரணி!