நாளை ஓணம் பண்டிகை கொண்டாட்டம்- தலைவர்கள் வாழ்த்து...

நாளை ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கேரள மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நாளை ஓணம் பண்டிகை கொண்டாட்டம்- தலைவர்கள் வாழ்த்து...

பாரம்பரியமிக்க சிறப்பு திருவிழாவாக கேரளா மற்றும் தென்தமிழகத்தில் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், மலையாள மொழி பேசும் தமிழ்நாடு வாழ் மலையாள மக்களும், கேரள மக்கள் அனைவரும், நலமிகு வாழ்வும், வளங்களும் பெற்று இன்புற்றிருக்க தமது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

மேலும், இந்நாள் சகோதரத்துவம், சமூக நல்லிணக்கத்தின் பெருமைமிகு அடையாளமாக திகழ்கிறது என்றும் புகழ்ந்துள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஓணம் திருநாளை உவகையோடு கொண்டாடி மகிழும், மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளை அன்போடு தெரிவிப்பதாக கூறியுள்ளனர்.

இந்நாளில் அன்பு, அமைதி, சகோதரத்துவம் வளர்க்கப்பட்டு, அகந்தையும், ஆணவமும் அகற்றப்பட வேண்டும் என்கிற உயரிய கருத்தினை அனைவரும் அறியும் வகையில் தங்களது வாழ்த்துகளை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.