இந்தியாவிலேயே ”கள ஆய்வு செய்து மக்கள் பிரச்சனையை தீர்ப்பவர்.. முதலமைச்சர் ஒருவரே...!” - சக்கரபாணி!

இந்தியாவிலேயே ”கள ஆய்வு செய்து மக்கள் பிரச்சனையை தீர்ப்பவர்.. முதலமைச்சர் ஒருவரே...!” - சக்கரபாணி!

இந்தியாவிலேயே கள ஆய்வு செய்து மக்கள் பிரச்னையை தீர்ப்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் என்று உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். 

திண்டுக்கல் மாவட்டம்  தாளையூத்து ஊராட்சியில் திராவிட மாடல் ஆட்சியின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, எண்ணற்ற திட்டங்களை அறிவித்து அது முழுமையாக மக்களை சென்றடைகிறதா என கீழ் மட்டம் வரை கள ஆய்வு செய்யும் முதலமைச்சரை தமிழ்நாடு பெற்றிருப்பதாக கூறினார்.

இதையும் படிக்க : பெண்களுக்கு முன்பதிவு இருக்கைகள் ஒதுக்கீடு 2-லிருந்து 4 ஆக மாற்றம்...போக்குவரத்துத்துறை அதிரடி!

தொடர்ந்து, இந்தியாவிலேயே கள ஆய்வு செய்து மக்கள் பிரச்னையை தீர்ப்பவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டும் தான். எனவே, மக்களின் எண்ணங்களை, தேவைகளை பூர்த்தி செய்யும் அவரது கரங்களை வலுப்படுத்துவதற்கு நாம் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.