1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பு..? சுகாதாரத்துறைச் செயலாளர் தகவல்...

ஒன்று முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கும் என சுகாதாரத்துறை செயலர் தெரிவித்துள்ளார்.

1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பு..? சுகாதாரத்துறைச் செயலாளர் தகவல்...

தமிழகம் முழுவதும் மூன்றாவது மெகா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. இந்த நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், அக்டோபர் மாத இறுதிக்குள் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட நிலை ஏற்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.

முதியோருக்கும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என கூறிய ராதாகிருஷ்ணன், ஒன்று முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கும் எனவும் குறிப்பிட்டார்.