ஜூன் 1 இல்லையா? ”பள்ளிகள் திறப்பு குறித்து இன்று அறிவிக்கப்படும்” - அன்பில் மகேஷ் தகவல்!

ஜூன் 1 இல்லையா? ”பள்ளிகள் திறப்பு குறித்து இன்று அறிவிக்கப்படும்” - அன்பில் மகேஷ் தகவல்!

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு குறித்து இன்று முதலமைச்சருடன் ஆலோசித்து அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொிவித்துள்ளாா். 

திருச்சியில் மாவட்ட கல்வி அலுவலா்களுடன் அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இணைய வழியில் ஆலோசனை நடத்தினாா். அப்போது அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது குறித்தும், பள்ளித் தூய்மை, விலையில்லாப் பொருட்களை உடனே வழங்குவது, தமிழ் கட்டாய பாடம் தனியார் பள்ளிகள் பின்பற்றுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும் என்றும், தனியார் பள்ளி வாகனங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு நல்ல முறையில் இருந்தால் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தினார். 

இதையும் படிக்க : திருமண விழாவில் பங்கேற்ற உதயநிதிக்கு கிடைத்த பரிசு வெள்ளி பேனா...!

தொடர்ந்து கூட்டத்தில் பேசிய அன்பில் மகேஷ், தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு குறித்து இன்று முதலமைச்சருடன் ஆலோசித்து பின்னர் அறிவிக்கப்படும் என தொிவித்தாா். முன்னதாக, தமிழ்நாட்டில் பள்ளிகள் ஜூன் 1 ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.