'ஆபரேஷன் லோட்டஸ்' - பா.ஜ.க. முயற்சிகள் கர்நாடகாவில் பலிக்காது...! - செல்வப்பெருந்தகை.
தமிழ்நாட்டு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில் ;-
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வாழ்த்துகள்,இதற்காக ஒத்துழைப்பு வழங்கிய தமிழக தோழமை கட்சிகளுக்கு நன்றி.2024 ஆம் ஆண்டில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட கர்நாடகா தேர்தல் ஒரு தொடக்கம் என்றார்.
மேலும் அவர், ராகுல் காந்தியின் தேசிய ஒற்றுமை பயணம் மற்றும் பரப்புரை கர்நாடகாவின் வெற்றிக்கு உதவியுள்ளது என்றும், பிரதமர் 18 முறை கர்நாடகாவிற்கு வந்தார் என்றும், அமித் ஷா நட்டா உள்ளிட்டோர் படை எடுத்தும் மக்கள் சக்தி முன் எடுபடவில்லை எனவும், மக்கள் சக்தியே பெரியது என நிரூபணம் ஆகியுள்ளது எனவும் கூறினார்.
தொடர்ந்து, கர்நாடகாவில் பாஜக கொடுத்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை என்றும் பாஜக-விற்கு மக்கள் பாடம் கற்பித்து விட்டார்கள். என்று குறிப்பிட்டு காங்கிரஸ் இல்லாத பாரதம் என்றார்கள், தற்போது பஜாவிற்கு அதற்கான பதிலை மக்கள் சொல்லி உள்ளனர் என்று விமர்சித்தார்.
இதையும் படிக்க } கர்நாடகத்தை அசைத்து பார்த்த பாரத் ஜோடோ யாத்திரை...!!
மேலும், கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களை தமிழ்நாடு அழைத்து வருவதற்கான வாய்ப்பு இல்லை என்றும், ஒரு வேலை அழைத்து வரப்பட்டால் அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் வரவேற்று உபசரிக்கும் என்றும் கூறினார்.
அதோடு, கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களிடம் குதிரை பேரம் செய்வதற்கான வாய்ப்பு இந்த முறை இல்லை என்றும், தனிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றும், குறுக்கு வழியில் 'ஆபரேஷன் லோட்டஸ்' என பாஜக முயற்சி செய்தாலும் இந்த முறை அது பலிக்காது என்றார்.
இதையும் படிக்க } திராவிட நிலப்பரப்பில் இருந்து பா.ஜ.க. முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது... முதலமைச்சர்!!