ரூ.290 கோடியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலங்கள்.. திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

கோவையில், 290 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 2 புதிய மேம்பாலங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ரூ.290 கோடியில் கட்டப்பட்டுள்ள  மேம்பாலங்கள்.. திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

கோவையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார். இவை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 கிலோ மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டுள்ள சுங்கம்- ராமநாதபுரம் மேம்பாலத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மேலும், 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கவுண்டம் பாளையம் சந்திப்பில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தையும் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு, தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.