உக்ரைனில் பரிதவிக்கும் மகளை மீட்டு தருமாறு பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை!!

உக்ரைனில் பரிதவிக்கும் மகளை மீட்டு தருமாறு பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை!!

சென்னை கொளத்தூரை சேர்ந்த பெற்றோர் உக்ரைனில் படித்துவரும் தங்களது மகளை பத்திரமாக இந்தியா அழைத்து வருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொளத்தூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த தம்பதி லஷ்மணன்- ராஜலட்சுமி. இவர்களின் மூத்த மகள் உக்ரைனில் உள்ள கார்க்யூ நகரில் படித்து வருகிறார்.

தற்போது அந்த நாட்டில் நடந்து வரும் போரின் காரணமாக அங்கு  தங்கும் வசதி இல்லாமலும், உணவின்றி தனது மகள் தவித்து வருவதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

எனவே மாணவியை மீட்டு இந்தியா அழைத்து வருமாறு அவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.