அன்னதான நிகழ்ச்சியில் உணவு வழங்கியதில் ஏற்பட்ட தகராறு - வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 2 வாலிபர்கள்

சிவகங்கையில் வீட்டின் மீது 2 வாலிபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சிசிடிவி காட்சி வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

அன்னதான நிகழ்ச்சியில் உணவு வழங்கியதில் ஏற்பட்ட தகராறு - வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 2 வாலிபர்கள்

சிவகங்கை மாவட்டம் பிள்ளைவயல் காளியம்மன் கோவில் பகுதியில் நேற்று அன்னதாக நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அப்போது அங்கிருந்த பழனியப்பன் என்பவருக்கும் நிர்மல் விக்கி , வெங்கடேஷ் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தகராறு காரணமாக ஆத்திரத்தில் இருந்த இளைஞர்கள் சிலர் பழனியப்பன்  வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர்.

இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவானது. அதனைதொடர்ந்து வீட்டின் உரிமையாளரான பழனியப்பன் சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளோடு தன் வீட்டில் பெட்ரோல் குண்டு  வீசப்பட்டதாக சிவகங்கை நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை தேடி வருகிறின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.