காதல் திருமணம் செய்தவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு....

தென்காசி மாவட்டம் சுரண்டையில் காதல் திருமணம் செய்த மணமகன் வீட்டில் பெட்ரோல் குண்டுகளை வீசியதாக 3 பேர் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதல் திருமணம் செய்தவர்  வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு....

தென்காசி மாவட்டம் சுரண்டை அடுத்த சிவகுருநாதபுரம் பாறையடி தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகன் விவேக்குமார், அதே பகுதியைச் சேர்ந்த மாற்று சமுதாயத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் விவேக்குமார் மீது ஆத்திரத்தில் இருந்த பெண்ணின் உறவினர்கள் அவரது வீட்டினுள் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். இதில் வீட்டின் முன் வைக்கப்பட்டு இருந்த மின் மோட்டார் எரிந்து நாசமானது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சுரண்டை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கழுநீர்குளத்தைச் சேர்ந்த மதன்குமார் மற்றும் இனாம் வெள்ளக்கால் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் , சென்னையை சேர்ந்த கார்த்திக்  ஆகிய மூவரும் இணைந்து பெட்ரோல் குண்டுகளை வீசி சென்றது தெரியவந்தது.

மூவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.