செல்போன் கடைக்குள் நுழைந்து மிரட்டல் விடுத்த காவலர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் ...

திருப்பூரில், செல்போன் கடைக்குள் நுழைந்து மிரட்டல் விடுத்த காவலர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

செல்போன் கடைக்குள் நுழைந்து மிரட்டல் விடுத்த காவலர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் ...

முத்தணம்பாளையத்தை சேர்ந்த ஜாபர் என்பவர் அவிநாசி சாலையில் செல்போன் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அருகேவுள்ள டிபன் கடைக்கு நேற்று முன்தினம் இரவு வீரபாண்டி காவல்நிலையத்தை சேர்ந்த காவலர் அலெக்சாண்டர் என்பவர் சாப்பிட சென்றார்.

அப்போது திடீரென செல்போன் கடைக்குள் சென்ற அவர், கடை உரிமையாளரிடம் வாக்குவாதம் செய்து, மிரட்டிச்சென்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோவை தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் ஜாபர் பதிவு செய்து, தமிழக முதலமைச்சர் தனது உயிருக்கு பாதுகாப்பு தர வேண்டும் என கேட்டுகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் அலெக்சாண்டரை, திருப்பூர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்தனர்.