உலகின் 5வது பொருளாதார நாடாக இந்தியாவை உயர்த்தியவர் பிரதமர் நரேந்திர மோடி - எல்.முருகன் பேச்சு!

உலகின் 5வது பொருளாதார நாடாக இந்தியாவை உயர்த்தியவர் பிரதமர் நரேந்திர மோடி - எல்.முருகன் பேச்சு!

பல்லாவரத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் உரையாற்றிய எல்.முருகன் பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.

பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்னை வந்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, விமான நிலைய புதிய ஒருங்கிணைந்த முனையம், சென்னை - கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கிய பின்னர், விவேகானந்தர் இல்லம் சென்ற பிரதமர், அடுத்ததாக அரசு நிகழ்ச்சி நடக்கும் பல்லாவரம் கிரிக்கெட் மைதானத்துக்கு சென்றடைந்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எல்.முருகன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் என பலரும் பங்கேற்றுள்ளனர்.

இதையும் படிக்க : விவேகானந்தர் இல்லம் சென்றார் பிரதமர் மோடி...! 

தொடர்ந்து நிகழ்ச்சி தொடங்கியதும் முதலில் உரையாற்றிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், காசி தமிழ் சங்கமம் குறித்தும், செளராஷ்டிரா தமிழ் சங்கமம் குறித்தும் பேசி பிரதமருக்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், உலகின் 5வது பொருளாதார நாடாக இந்தியாவை உயர்த்தியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி என்று பெருமிதம் தெரிவித்தார்.

இவரைத்தொடர்ந்து பேசிய மத்திய விமானத்துறை அமைச்சர் ஜோதிர்ஆதித்த சிந்தியா, பிரதமர் மோடியின் ஆட்சியில் விமான நிலையங்கள் இந்தியாவில் இரட்டிப்பாக்கி உள்ளன. கட்டமைப்புக்கு சிறந்த மாநிலமாக தமிழகம் இருப்பதாக  பிரதமர் நம்பிக்கை கொண்டிருப்பதாக தெரிவித்தார்.