முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை... அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தல்...

அரசு அலுவலர்களின் பணித்திறனை உயர்த்தும் வகையில் பயிற்சிகள் அளிக்கவேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை... அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தல்...
மனிதவள மேலாண்மைத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. அப்போது அலுவலர்களுக்கு சிறப்பான பயிற்சிகளை அளிப்பதன் மூலம், அவர்களது பணித்திறனை மேம்படுத்தி, அதன்மூலம் மக்கள் பயன்பெறும் வகையில் சேவைகளின் தரத்தை உயர்த்த வேண்டும் என முதலமைச்சர் அறிறுத்தினார்.
 
மேலும் முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார். இந்த ஆய்வுக் கூட்டத்தில்  நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.