அரசுப் பேருந்துகளில் ஒழுகும் மழைநீர்... கோவையில் பயணிகள் அவதி... 

கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் மழை நீர் ஒழுகுவதால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர்.

அரசுப் பேருந்துகளில் ஒழுகும் மழைநீர்... கோவையில் பயணிகள் அவதி... 

கோவை மாவட்டம் புறநகர் பகுதிகளில் இன்று மாலை மிதமான மழை பெய்தது. கருமத்தம்பட்டி பகுதியில் இருந்து அன்னூருக்கு சென்ற புறநகர் ( A11) பேருந்தின் உட்பகுதியில் மழைநீர் உள்ளே வடிந்தது. 

இதனால் பேருந்தில் அமர முடியாமல் நின்றபடி  பயணம் மேற்கொண்டனர். கடந்த ஒரு மாத காலமாக தொடர் மழை பெய்து வரும் நிலையில் புறநகர் பகுதியில் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள்  மழையில் நனைந்தபடியே  பயணிப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.

மழைகாலங்களில் பொது மக்கள் நனையாமல் பயணிக்கும் அளவிற்கு பேருந்துகளை பழுது நீக்கி இயக்கிட போக்குவரத்து கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேருந்து பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.