சுமார் ரூ.200 கோடி மதிப்புடைய ஒரு ஏக்கர் நிலம் மீட்பு...!

பரங்கிமலையில் ரூ.200 கோடி மதிப்புடைய ஒரு ஏக்கர் நிலத்தை மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை அடுத்த பரங்கிமலை பட்ரோடு - பூவிருந்தவல்லி சாலையில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஏக்கர் பரப்பளவிலான அரசு நிலம் குத்தகைக்கு விடப்பட்டது. ஆனால், இதற்கான முதிர்வு காலம் நிறைவடைந்த பிறகும் அந்த நிலம் அரசிடம் ஒப்படைக்கப்படவில்லை.

இதனையடுத்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் உத்தரவின்படி, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். போலீஸ் பாதுகாப்புடன் கட்டிடங்கள் மற்றும் சுற்றுச் சுவர்களை வருவாய்த்துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரங்களின் உதவியுடன் இடித்து அகற்றினர்.

இந்த நடவடிக்கையின் மூலம் பரங்கிமலை - பட்ரோட்டில் உள்ள சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இடங்கள் கைப்பற்றப்படும் என  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.