காலை உணவுத் திட்டத்தின் பெயரை மாற்றக்கோரி முதலமைச்சருக்கு மாணவன் கோரிக்கை!

காலை உணவுத் திட்டத்தின் பெயரை மாற்றக்கோரி முதலமைச்சருக்கு மாணவன் கோரிக்கை!

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு கலைஞர் காலை உணவுத் திட்டம் என்று பெயர் சூட்டுமாறு மாணவன் ஒருவர் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். 

கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் சேப்ளாபட்டி நடுநிலைப் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் முரசொலி மாறன் என்ற மாணவன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதையும் படிக்க : அருவிகளில் குளிப்பதற்கு தடை...ஏமாற்றத்துடன் திரும்பும் சுற்றுலா பயணிகள்!

அவர் எழுதிய கடிதத்தில், காலை உணவுத் திட்டம் ஏழை, எளிய, பாமர, அடித்தட்டு குடும்பங்களின் குழந்தைகளுக்கு வரப்பிரசாதம் என்று தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். மேலும், இத்திட்டத்திற்கு கலைஞர் காலை உணவுத் திட்டம் என்று பெயர் சூட்டுமாறு தனது வகுப்பு மாணவர்களுடன் சேர்ந்து கோரிக்கை விடுத்துள்ளார்.