கடலில் தத்தளித்த இலங்கையை சேர்ந்த 3 பேர் மீட்பு...!

கடலில் தத்தளித்த இலங்கையை சேர்ந்த 3 பேர் மீட்பு...!

படகு பழுதானதால் கடலில் தத்தளித்த இலங்கையை சேர்ந்த 3 பேரை வேதாரண்யம் போலீசார் மீட்டனர். 

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த     ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்திலிருந்து 2 நாட்டிக்கல்  தொலைவில் இலங்கையைச் சார்ந்த பைபர்படகு ஒன்று  நிற்பதாக வேதாரண்யம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலை அடுத்து உடனடியாக  வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகள் படகில் சென்று அங்கு நின்ற இலங்கை பைபர்படகை கைப்பற்றி அதில் இருந்த 3 பேரையும் ஆறுகட்டுறை கடற் பகுதிக்கு கொண்டு வந்தனர்.

மூன்று பேரையும் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்ததில் இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டத்தை  சேர்ந்த  ரீகன்,சிவக்குமார், ஸ்ரீகாந்தன் என்பது தெரியவந்துள்ளது.

இவர்கள் மீன்பிடிக்க வந்த போது படகு இஞ்சின் பழுதால் கடந்த 4 நாட்களாக  கடலில் தத்தளித்ததாக  கூறியுள்ளனர். 

இலங்கைச் சேர்ந்த 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து இவர்கள் மீனவர்களா? கஞ்சா கடத்துவதற்காக  தமிழகம் வந்தார்களா? அல்லது கடற் கொள்ளையர்களா ? என பல்வேறு கோணங்களில் வேதாரண்யம் கடலோர காவல் குழு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதையும் படிக்க   |  சரியாக பணிகளை செய்யாத அதிகாரிகளை கடுமையாக சாடிய ஆவடி மேயர்...!