செம்பரம்பாக்கம் ஏரியில் உயர்ந்துவரும் நீர்மட்டம்; நாளை உபரி நீர் திறப்பு..!

செம்பரம்பாக்கம் ஏரியில்  உயர்ந்துவரும்  நீர்மட்டம்;  நாளை உபரி நீர் திறப்பு..!

காஞ்சிபுரம் மாவட்டம்  செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் நாளை உபரி நீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

செம்பரம்பாக்கம் ஏரி.  தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் கிருஷ்ணா நதிநீர் வருகையால் தற்போது, ஏரியில் நீர் நிறைந்து காணப்படுகிறது.

இன்று காலை நேர நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்ட உயரம் 21.96 அடியாகவும், மொத்த கொள்ளளவு 3,110 மில்லியன் கன அடியாகவும், நீர் வரத்து 231 கன அடியாகவும், மேலும், நீர் வெளியேற்றம் 138 கன அடியாகவும் உள்ளது.

இன்றைய தினம் செம்பரம்பாக்கம் ஏரியின் உயரம் 22 அடியை எட்ட இருப்பதால் அணையின் பாதுகாப்பு கருதி நாளை முதற்கட்டமாக 100 கன அடி உபரி நீர் வெளியேற்ற காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் உத்தரவிட்டுள்ளார். 

மேலும் கரையோரம் வசிக்கக்கூடிய சிறுகளத்தூர், நந்தம்பாக்கம், திருமுடிவாக்கம் உள்ளிட்ட கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டு அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வந்து கொண்டிருப்பதாலும் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அது மட்டுமின்றி பருவமழை தொடங்க உள்ள நிலையில் திடீரென அதிகளவில் நீர் வந்தால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் அதிகரித்த வெள்ள பாதிப்பு ஏற்படும் என்பதற்காக தற்போது முதற்கட்டமாக நாளைய தினம் 100 கன அடி உபரி நீர் திறந்து விடப்படுகிறது. 

சிக்கராயபுரம் கல்குவாரி முழுவதும் நீர் நிறைந்து காணப்படுவதால் அதிலிருந்து தற்போது தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. பருவமழைக்கும் முன்பு செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டத்தை சற்று குறைத்து வைத்து கண்காணிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்திருப்பதும் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படுவது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிக்க  | மீனவர்கள் மீதான அத்துமீறல்கள் தடுக்க வேண்டி அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்..!