குண்டும் குழியுமாக இருக்கும் சாலை: வாகன ஓட்டிகள் அவதி...

உளுந்தூர்பேட்டை அருகே சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

குண்டும் குழியுமாக இருக்கும் சாலை: வாகன ஓட்டிகள் அவதி...

உளுந்தூர்பேட்டை அருகே சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கல்சிறுநாகலூர், சிதேவி, சிக்காடு, எ.கொளத்தூர் என 20- மண் மேற்பட்ட கிராமங்களின் வழியாக தியாக துருவம், ரிஷிவந்தியம் கள்ளக்குறிச்சி,  உளுந்தூர்பேட்டை, திருவண்ணாமலை  போன்ற நகரங்களுக்கு செல்லக்கூடிய நெடுஞ்சாலை மற்றும் கிராமப்புற சாலை உள்ளது. இச்சாலையின் வழியாக அப்பகுதியில் இருக்கும் விவசாயிகள் தாணியங்களை அறுவடை செய்து விற்பனைக்காக மார்க்கெட்டுக்கு  டிராக்டர், டாட்டா ஏசியில்  வாகனங்களில்  ஏற்றி செல்வது வழக்கம்.

இந்நிலையில் தாணியங்கள் ஏற்றிச் செல்லும்போது குண்டும் குழியுமாக சாலையில் டயர் வெடித்தும், பஞ்சராகி எதிர் எதிரே வரும் வாகனங்கள் மோதிய விபத்தில் உயிர் சேதமும், எலும்பு முறிவுகள் ஏற்பட்டு பொதுமக்களும், நடந்து செல்லும் பொதுமக்களும்,  வாகன ஓட்டிகளும் கடுமையான சிரமத்திற்கு ஆளாவதாக தெரிவித்தனர். அதனால் குண்டும் குழியுமாக உள்ள சாலையை  சரிசெய்ய வேண்டிய தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும்  அப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள் மற்றும் வாகன ஓட்டிகள்  கோரிக்கை விடுத்தனர்.